விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Wednesday, July 30, 2014

மாநில அளவிலான கால்பந்துப் போட்டி: விருத்தாசலம் அணி சாம்பியன்


அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் விருத்தாசலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி ஆட்டத்தில் விருத்தாசலம் அணியும். பெரம்பலூர் தனியார் பொறியியல் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் திறமையாக விளையாடியதால், ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் விழவில்லை. இதனையடுத்து டைபிரேக்கரில் விருத்தாசலம் வீரர்கள் நேர்த்தியாக விளையாடி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றனர். பெரம்பலூர் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. அரியலூர் மாவட்ட கால்பந்தாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன. மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments: